Published : 22 Jun 2018 07:41 AM
Last Updated : 22 Jun 2018 07:41 AM

கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் தொடக்கம்: ஜூன் 30-ம் தேதி கடைசி நாள்

தமிழகத்தில் உள்ள 7 அரசு கல்வியியல் கல்லூரிகளிலும், 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளிலும் பிஎட் படிப்பில் 1,700-க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இவை ஒற்றைச்சாளர முறையில் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். இந்த நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் பிஎட் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் நேற்று முதல் வழங்கப்படுகின்றன.

ஜூன் 30-ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, ‘தமிழ்நாடு பிஎட் மாணவர் சேர்க்கை செயலர், லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-5’ என்ற முகவரிக்கு ஜூலை 3 மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x