Published : 22 Jun 2018 07:43 AM
Last Updated : 22 Jun 2018 07:43 AM

உடல் உறுப்பு தான விவகாரம் குறித்த விசாரணை அறிக்கை விரைவில் தாக்கல்: சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி, அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

மன அழுத்தம், மனச்சோர்வு, கவலை, பதற்றம் போன்றவற்றை குறைப்பதற்கு யோகா பெரிதும் உதவுகிறது. சென்னை அண்ணா நகரில் அமைந்துள்ள மருத்துவமனையில் இயற்கை வழியில் உடல்பருமனை குறைக்க சிறப்பு சிகிச்சைகள் மேற்கொள்ளப் படுகிறது.

இதில் எவ்வித பக்க விளைவுகளும் இல்லாத நீராவி குளியல், வாழை இலை குளியல், மண் குளியல், இயற்கை உணவு, யோகா உள்ளிட்ட சிகிச்சைகள் எவ்வித கட்டணமும் இல்லாமல் அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும், அரசு மருத்துவமனைகளில் யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவில் 73 மருத்துவர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.

நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் விஜயபாஸ்கர் கூறுகையில், “மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.உடல் உறுப்பு தான விவகாரம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. விசாரணை அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், சுகாதார திட்ட இயக்குநர் பி.உமாமகேஸ்வரி, மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x