Published : 22 Jun 2018 07:43 AM
Last Updated : 22 Jun 2018 07:43 AM
சிபிஎஸ்இ-யின் உதவி பேராசிரியர் தகுதித்தேர்வு (நெட்) ஜூலை 8-ம் தேதி நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் நடக்கிறது. இந்த நிலையில், நெட் தேர்வுக்கு விண்ணப்பித்த தகுதியான நபர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு (ஹால்டிக்கெட்) சிபிஎஸ்இ இணையதளத்தில் (www.cbse.nic.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் இந்த இணையதளத்தில் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு தங்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT