Published : 22 Jun 2018 07:43 AM
Last Updated : 22 Jun 2018 07:43 AM
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் பணிக்காலத்தை மேலும் 4 மாதம் நீட்டித்து தமிழக அரசு உத்தர விட்டுள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, உடல்நலக் குறை வால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 2016 டிசம்பர் 5-ம் தேதி மரணமடைந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பலரும் சந்தேகம் எழுப்பினர். இதையடுத்து ஜெயலலிதா மர ணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து, கடந்த ஆண்டு செப்டம்பர் 25-ல் தமிழக அரசு அறிவித்தது. 3 மாதங்களில் விசாரணையை முடிக்க ஆணையத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
பலரிடம் விசாரணை நடத்த வேண்டி இருந்ததால் ஆணையத்தின் பணிக்காலத்தை மேலும் 6 மாத காலத்துக்கு நீட்டித்து கடந்த டிசம்பர் 22-ம் தேதி தமிழக அரசு அறிவித்தது. அதன்படி வரும் 24-ம் தேதியுடன் ஆணையத்தின் பணிக்காலம் முடிவடைவதாக இருந்தது.
விசாரணை முழுமை பெறவில்லை என்றும், மேலும் பலரிடம் விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவித்ததைத் தொடர்ந்து விசாரணை ஆணையத்தின் பணிக்காலத்தை மேலும் 4 மாதங்கள் நீட்டித்து அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு வீட்டில் சிகிச்சை அளித்த டாக்டர் சிவக்குமார் ஏற்கெனவே ஆணையத் தில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார். மறுவிசாரணைக்காக வரும் 25-ம் தேதி மீண்டும் ஆஜராகும்படி அவருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி யுள்ளது.
டாக்டர் நளினி, செவிலியர் பிரேமா ஆண்டனி ஆகியோர் 26-ம் தேதியும், ஐஏஎஸ் அதிகாரி ராமலிங்கம் 27-ம் தேதியும், உளவுத்துறை ஐஜி கே.என்.சத்தியமூர்த்தி, ‘துக்ளக்’ ஆசிரியர் குருமூர்த்தி ஆகியோர் 28-ம் தேதியும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முன்னாள் மேலாளர் மகாலட்சுமி, டாக்டர்கள் ஜெயஸ்ரீ கோபால், சாந்தாராம், ராமச்சந்திரன் ஆகியோரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை நடத்த உள்ளனர்.
அதற்காக அவர்கள் 27-ம் தேதி ஆணையத்தில் நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT