Published : 10 Jun 2018 02:47 PM
Last Updated : 10 Jun 2018 02:47 PM
இயற்கையோடு இணைந்து பெண்மையை காப்போம் என்ற கருத்தை மையப்படுத்தி நீலகிரி பெண் நின்றவாறு மோட்டார் சைக்கிளை ஓட்டி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார்.
நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த தாமஸ் என்பவர் மனைவி சைதிமேத்யூ(45). இவர் டெய்லராக பணிபுரிகிறார். இவருக்கு பள்ளி, கல்லூரியில் படிக்கும் 2 குழந்தைகள் உள்ளனர்.
பொதுமக்கள் மத்தியில் இயற்கை குறித்தும், பெண்கள் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊட்டியில் இருந்து மோட்டார் சைக்கிள் பயணத்தை கடந்த 6-ம் தேதி தொடங்கினார். அவர் ஊட்டியில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திருச்சி, திண்டுக்கல் வழியாக நேற்று தேனி வந்தார். மொத்தம் 3 ஆயிரம் கி.மீ. தூரம் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். தன் பயணம் முழுவதும் நின்று கொண்டே மோட்டார் சைக்கிளை ஓட்டி வருகிறார்.
இது குறித்து அவர் கூறியதாவது: பெண்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இயற்கையோடு இணைந்து பெண்மையை காப்போம் என்ற கருத்தை மையப்படுத்தி பயணம் செய்யத் திட்டமிட்டேன். நீலகிரியில் ஜூன் 6-ம் தேதி தொடங்கிய பயணம் மதுரை, கன்னியாகுமரி வழியாகச் சென்று ஜூன் 13-ம் தேதி சென்னையில் முடிவடைய உள்ளது. இயற்கை மீது ஆர்வமுள்ள இளைஞர் குழுக்களை ஒன்றிணைத்து தொடர்ந்து இதுபோன்ற பணிகளில் ஈடுபட உள்ளேன் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT