Published : 10 Jun 2018 09:54 AM
Last Updated : 10 Jun 2018 09:54 AM
ஆர்.கே.நகரில் நடந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் என்.மருதுகணேஷ். இவர், ஆர்.கே.நகர் கிழக்குப் பகுதி திமுக செயலாளராகவும் பணியாற்றி வந்தார்.
முதல்முறையாக அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில், 2-வது முறையாக தேர்தல் அறிவித்தபோதும், மீண்டும் இவரையே வேட்பாளராக திமுக அறிவித்தது. இந்த இடைத்தேர்தலில் திமுக தோல்வியடைந்தது. இந்நிலையில், மருதுகணேஷின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்ட அறிவிப்பு: ‘‘ஆர்.கே.நகர் கிழக்கு பொறுப்பாளர் மருதுகணேஷ் விடுவிக்கப்பட்டு, வெ.சுந்தர்ராஜன் நியமிக்கப்படுகிறார். அர்.கே.நகர் மேற்கு பகுதி திமுக செயலாளர் ஏ.டி.மணி விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக சா.ஜெபதாஸ் பாண்டியன் நியமிக்கப்படுகிறார்’’ என்று கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT