Published : 10 Jun 2018 09:52 AM
Last Updated : 10 Jun 2018 09:52 AM

பராமரிப்பு பணிகள் காரணமாக 3 மின்சார ரயில்கள் ரத்து

சென்னை - கூடூர் மார்க்கத்தில் பல்வேறு இடங்களில் ரயில்பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் இன்று (10-ம் தேதி) 3 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பராமரிப்பு பணிகள் காரணமாக ஞாயிற்றுக்கிழமைஅன்று சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி இடையே அதிகாலை 5.55, கும்மிடிப்பூண்டி - சென்ட் ரல் இடையே காலை 6.55, ஆவடி - சென்ட்ரல் இடையே அதிகாலை 4.40 மணிக்கு செல் லும் ரயில்கள் ரத்து செய்யப் பட்டுள்ளன.

 சென்ட்ரலில் இருந்து சூலூர்பேட்டைக்கு அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு செல்லும் மின்சார ரயில் எண்ணூர் வரை மட்டுமே இயக்கப்படும். கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்ட்ரலுக்கு காலை 5.55 மணிக்கு புறப்பட்டு செல்லும் மின்சார ரயில் எண்ணூரில் இருந்து புறப்படும். சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு காலை 7 மணிக்கு செல்லும் மின்சார ரயில் எண்ணூர் வரை மட்டுமே இயக்கப்படும். சூலூர்பேட்டையில் இருந்து சென்ட்ரலுக்கு காலை 7.25 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில் எண்ணூரில் இருந்து இயக்கப்படும். இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளத

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x