Published : 10 Jun 2018 08:50 AM
Last Updated : 10 Jun 2018 08:50 AM

மங்களூர் அருகே விசைப்படகு என்ஜின் பழுதால் கடலில் தவித்த 10 தமிழக மீனவர்கள் மீட்பு: மங்களூரில் கடலோர காவல் படை மீட்டது

விசைப்படகு என்ஜின் பழுதாகி நடுக்கடலில் தவித்த 10 தமிழக மீனவர்களை கடலோரக் காவல் படையினர் கர்நாடக மாநிலம் மங்களூர் கடல் பகுதியில் மீட்டனர்.

கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே அரபிக் கடலில் குமரி மாவட்ட பதிவு கொண்ட விசைப்படகு ஒன்று என்ஜின் பழுதாகி தத்தளித்துக் கொண்டிருந்தது.

படகில் இருந்த 10 மீனவர்களும் கடலோரக் காவல் படையினரிடம் வயர்லெஸ் ரேடியோ மூலம் உதவியை நாடினர். இதையடுத்து கர்நாடக மாநிலம் மங்களூர் கடலோரக் காவல் படை முகாமில் இருந்து ரோந்து கப்பல் ஒன்று மீட்புப் பணிக்காக நேற்று விரைந்தது.

நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த விசைப்படகை கண்டறிந்து மங்களூர் துறைமுகத்துக்கு கடலோரக் காவல்படையினர் மீட்டு வந்தனர். இதன்மூலம், நடுக்கடலில் தவித்த 10 மீனவர்களும் மீட்கப்பட்டனர்.

அவர்கள் படகுடன் மங்களூர் மீன்பிடி துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த தகவல் கடலோரக் காவல் படையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மீனவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூரில் இருந்து அரபிக் கடலில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்காகச் சென்றிருக்கலாம் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x