Published : 10 Jun 2018 08:47 AM
Last Updated : 10 Jun 2018 08:47 AM
சென்னை விமான நிலையத்தில் ரூ.4 கோடி மதிப்புள்ள 13 கிலோ எடை கொண்ட தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. துபாயில் இருந்து கடத்தி வந்த கர்நாடக மாநில பெண்ணை அதிகாரிகள் கைது செய்தனர்.
துபாயில் இருந்து விமானம் ஒன்று சென்னைக்கு நேற்று வந்தது. சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளை சோதனை செய்து வெளியே அனுப்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது வந்த கர்நாடக மாநிலம் சிக்மகளூரை சேர்ந்தவர் பத்மா ஆம்பிள் வெங்கட்ராமையா (52) என்ற பெண் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த பெண்ணின் உடைமைகளை சோதனை செய்தனர். அதில் ஒன்றும் சிக்க வில்லை.
இதையடுத்து பெண்ணை தனி அறைக்கு அழைத்துச் சென்று பெண் அதிகாரிகள் தீவிர சோதனை செய்தனர். அப்போது ரூ.4 கோடி மதிப்புள்ள 13 கிலோ எடையுள்ள 25 தங்கச் செயின்கள் மற்றும் 4 வளையல்களை ஆடைக்குள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தங்க நகைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT