Published : 10 Jun 2018 08:39 AM
Last Updated : 10 Jun 2018 08:39 AM

ஐபிஎஸ் அதிகாரிகள் 11 பேர் பணி இடமாற்றம்

மதுரை, திருப்பூர் காவல் ஆணையர்கள் உட்பட 11 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள் ளனர்.

திருப்பூர் நகர காவல் ஆணையராக எஸ்.மனோகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஐஜி. யாக பதவி உயர்வும் அளிக்கப்பட்டுள்ளது. சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு டிஐஜியாக இருந்த பாஸ்கரனுக்கு ஐஜி.யாக பதவி உயர்வு வழங்கப்பட்டு, சென்னை ஆபரேஷன் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாநகர காவல் ஆணையராக இருந்த நாகராஜன் சென்னை காவலர் பயிற்சி பள்ளி ஐஜி.யாகவும், சென்னை காவலர் பயிற்சி பள்ளி ஐஜி.யாக இருந்த சண்முகராஜேஷ்வரன் மதுரை தெற்கு மண்டல ஐஜி.யாகவும், மதுரை தெற்கு மண்டல ஐஜி.யாக இருந்த சைலேஸ்குமார் சென்னை ஆயுதப்படை ஐஜி. யாகவும், காவலர் நலன் ஐஜி. யாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மதுரை நகர காவல் ஆணையராகவும், மதுரை காவல் ஆணையராக இருந்த மகேஷ்குமார் அகர்வால் சென்னை சிறப்பு குற்றப்புலனாய்வு பிரிவு ஐஜி.யாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகர கூடுதல் ஆணையராக இருந்த சேஷசாய் காவலர் நலன் ஐஜி.யாகவும், சென்னை குற்றப்பிரிவு ஐஜி.யாக இருந்த பாஸ்கரன் சென்னை காவலர் பயிற்சி பள்ளி ஐஜி.யாகவும், சென்னை தொழில்நுட்ப பிரிவு டிஐஜியாக இருந்த மகேஷ்குமார் திருநெல்வேலி காவல் ஆணையராகவும், காவலர் பயிற்சி பள்ளி டிஐஜியாக இருந்த ஆசியம்மாள் சென்னை தொழில்நுட்ப பிரிவு டிஐஜியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x