Published : 10 Jun 2018 08:38 AM
Last Updated : 10 Jun 2018 08:38 AM
கர்நாடக மாநில அரசு சார்பில் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான உறுப்பினர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் கர்நாடக முதல்வருமான எம்.வீரப்பமொய்லி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த எம்.வீரப்பமொய்லி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கர்நாடக மாநிலத்தில் புதிய அரசு இப்போதுதான் பொறுப்பேற்றுள்ளது. அம்மாநில அரசு சார்பில் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான உறுப்பினர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள்.
பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இவற்றின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த காங்கிரஸ் ஆட்சியின்போது, எண்ணெய் நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் கோடி மானியம் வழங்கப்பட்டது. ஆனால் பாஜக ஆட்சியில் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி மட்டுமே மானியமாக வழங்கப்படுகிறது. எனவே பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவந்தால் மட்டுமே பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த முடியும். ‘காலா’ திரைப்படத்துக்கு கர்நாடக மாநிலத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருவது உணர்வுப்பூர்வமானது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT