Published : 02 Jun 2018 09:43 AM
Last Updated : 02 Jun 2018 09:43 AM
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தை அடுத்து உள்ளது தோக்கம்பூர் கிராமம். இங்கு தூய லூர்து அன்னை தேவாலயம் உள்ளது.
இங்கு திருவிழாவை முன்னிட்டு, கடந்த மாதம் 27-ம் தேதி இரவு தேர் பவனி விழா நடந்தது. இந்த விழாவில், லோடு ஆட்டோ ஒன்றில் பட்டாசுகளை வைத்து, அவற்றை எடுத்து சிலர் வெடித்துக் கொண்டே சென்றனர். சம்பந்தப்பட்ட லோடு ஆட்டோவில் சிறுவர்- சிறுமியர், பெண்கள் உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர்.
தேர் பவனியின் போது, வெடிக்கப்பட்ட ராக்கெட் வகை பட்டாசிலிருந்து தெறித்த தீப்பொறிகள் பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த லோடு ஆட்டோவில் விழுந்தன. உடனே ஆட்டோவில் இருந்த பட்டாசுகள் அனைத்தும் வெடித்து சிதறின.
அப்போது லோடு ஆட்டோவில் அமர்ந்திருந்த சென்னை- அண்ணாநகரை சேர்ந்த அக்காள் - தம்பிகளான காவ்யா (9), சஞ்சய் (8), போந்தவாக்கம் தர்ஷினி (10), தோக்கம்பூரை சேர்ந்த அர்ஜுன் (11), ஜோசப் (5), ஹரீஷ்பாபு (6), கல்லூரி மாணவி பர்வீனா (21) ஆகிய 7 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது. அவர்கள் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இச்சூழலில், போந்தவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தர்ஷினி (10), சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார்.
இவ்விபத்து தொடர்பாக ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த ஆரம்பாக்கம் போலீஸார், லோடு ஆட்டோ உரிமையாளர் தோக்கம்பூரைச் சேர்ந்த தசரதன், ஓட்டுநர் அசோக் ஆகிய இருவரை கடந்த 28-ம் தேதி கைது செய்தனர்.
இந்நிலையில், மாதா கோயில் நிர்வாகிகளில் ஒருவரான முனுசாமி என்கிற ஜோசப்பை நேற்று கைது செய்தனர்.
தலைமறைவாக உள்ள முதன்மை நிர்வாகி அந்தோணியை தீவிரமாக தேடி வரு கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT