Published : 02 Jun 2018 08:17 AM
Last Updated : 02 Jun 2018 08:17 AM

தூத்துக்குடி சம்பவத்தின்போது ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்தியது யார்?- தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி

தூத்துக்குடி சம்பவத்தின்போது பேருந்து மீதும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மீதும் கல் வீசியும், தீ வைத்தும், ஆயுதம் ஏந்திப் போராட்டம் நடத்தியதெல்லாம் மக்கள்தானா என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் கலந்தனர் என்று பாஜகவினரும், ரஜினியும் கூறுவதை, பிற கட்சிகள் ஏன் எதிர்க்கிறார்கள் என்று தெரியவில்லை.

பேருந்து மீதும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மீதும் கல் வீசியும், தீ வைத்தும், ஆயுதம் ஏந்திப் போராட்டம் நடத்தியதெல்லாம் மக்கள்தானா? போராட்டம் மட்டுமே வாழ்க்கை என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் கூறுவது தவறு.

ரஜினி ஒரு கருத்தை துணிச்சலாகக் கூறியுள்ளார். அவரது கருத்து வரவேற்கத்தக்கது.

இவ்வாறு தமிழிசை கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x