Published : 01 Jun 2018 10:28 AM
Last Updated : 01 Jun 2018 10:28 AM
குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அடிக்கடி எக்ஸ்ரே பிலிம் தட்டுப்பாடு ஏற்படுவதால் நோயாளிகள் அவதியுறுகின்றனர்.
குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே பிலிம்களுக்கு திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், விபத்தில் சிக்குபவர்கள் சிகிச்சை பெற முடியாமல் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இங்கு தினமும் 100 முதல் 150-க்கும் மேற்பட்ட நோயாளிகள் எக்ஸ்ரே எடுக்க வருகின்றனர். இவர்களில் பலருக்கு, எக்ஸ்ரே எடுத்து அதன் தன்மையை அறிந்த பிறகே சிகிச்சை அளிக்கப்படும்.
ஒரு மாதமாக தட்டுப்பாடு
ஆனால், கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக இந்த மருத்துவமனையில் எக்ஸ்ரே பிலிம்கள் தட்டுப்பாடாக உள்ளது. இதனால், நோயாளிகள் அதிக பணம் செலவழித்து வெளியே தனியார் மையங்களில் எக்ஸ்ரே எடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, நோயாளிகள் நலன் கருதி, எக்ஸ்ரே எடுக்க தேவையான பிலிம் ரோல்களை முறையாக வழங்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து மருத்துவர் ஒருவர் கூறியதாவது:
எக்ஸ்ரே பிலிம் தட்டுப்பாடு உண்மைதான். நிலைமையை சமாளிக்க அருகில் உள்ள மருத்துவமனையில் இருந்து பிலிம் பெற்று பயன்படுத்தி வருகிறோம்.
ஓரிரு நாளில் சரியாகும்
பிலிம் விநியோகம் செய் யும் ஒப்பந்ததாரர் கால தாமதம் ஏற்படுத்தியுள்ளார். பல இடங்களில் இந்த பிரச்சினை உள்ளது. ஓரிரு நாளில் இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டுவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT