Published : 01 Jun 2018 10:16 AM
Last Updated : 01 Jun 2018 10:16 AM
தூத்துக்குடி, காஞ்சிபுரம், திருவள்ளூர் வட்டாட்சியர்கள் உட் பட தமிழகம் முழுவதும் 84 வட்டாட்சியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு, இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி வட்டாட்சியராக இருந்த வி.செல்வகுமார், கலால் பிரிவு உதவி ஆணையராக பதவி உயர்வு அளிக்கப்பட்டு, விருதுநகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல காஞ்சிபுரம் வட்டாட்சியராக இருந்த வி.ஈஸ்வரி, திருச்சி டிஸ்டிலரி அதிகாரியாகவும், திருவள்ளூர் வட்டாட்சியர் கஜேந்திரன், கடலூர் ஆய்வுப் பிரிவு அதிகாரியாகவும், திருவள்ளூரின் மற்றொரு வட்டாட்சியரான உஷா, சென்னை அமலாக்கப் பிரிவு உதவி ஆணையராகவும் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.
சென்னை வட்டாட்சியர் சுப்பிரமணியன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் தனி உதவியாளராகவும், சென்னையின் மற்றொரு வட்டாட்சியர் அல்லி, அரக்கோ ணம் சிப்காட் சிறப்பு துணை ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல தமிழகம் முழுவதும் 84 வட்டாட்சியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு, இடமாற்றம் செய்யப்பட்டுள்ள னர்.
இதற்கான உத்தரவை வரு வாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் நேற்று வெளியிட் டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT