Published : 01 Jun 2018 10:14 AM
Last Updated : 01 Jun 2018 10:14 AM

பல்லாவரம், கீழ்கட்டளை ஏரிகளை ரூ.14.65 கோடியில் சீரமைக்கும் பணிகள் தொடக்கம்

பல்லாவரம், கீழ்கட்டளை ஏரிகள் ரூ.14.65 கோடியில் சீரமைக்கப்பட உள்ளன.

பொதுபணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பல்லாவரம் மற்றும் கீழ்கட்டளை ஏரிகளை சீரமைக்க வேண்டும் என கடந்த பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனிடையே 2 ஏரிகளையும் சீரமைக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. சீரமைப்பு பணிகளை பல்லாவரம் நகராட்சி மேற்கொள்ள பொதுபணித் துறை சார்பில் தடை இல்லா சான்றும் வழங்கப்பட்டது.

இதனையடுத்து தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி திட்ட நிதியில் ரூ.14.65 கோடியில் பல்லாவரம் பெரிய ஏரி மற்றும் கீழ்கட்டளை ஏரியை சீரமைக்க மதிப்பீடு தயாரிக்கப்பட்டு பணிகள் செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது முதல் கட்டமாக கீழ்கட்டளை ஏரி சீரமைப்பு செய்யும் பணிகள் தொடங்கி யுள்ளன.

இதுகுறித்து பல்லாவரம் நகராட்சி பொறியாளர் ஒருவர் கூறும்போது, “பல்லாவரம் பெரிய ஏரி மற்றும் கீழ்கட்டளை ஏரி தூர்வாரப்பட்டு மதகுகள் சீரமைக்கப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்படும். 2 ஏரிகளிலும் மழைநீர் முழுவதுமாக சேமிக்கப்பட்டு கரைகளில் நடைபாதை அமைக்கவும், பல்லாவரம் பகுதியில் முக்கிய நீர் ஆதாரமாக இந்த 2 ஏரிகளையும் மாற்றும் வகையிலும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x