Published : 01 Jun 2018 10:04 AM
Last Updated : 01 Jun 2018 10:04 AM

ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தில் போலீஸாரை தாக்கிய இளைஞர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

கடந்த ஏப். 10-ல் சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது, போலீஸார் தடியடி நடத்தினர். அப்போது போலீஸார் மீது தாக்குதல் நடத்தியதாக போலீஸார் 10-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். இவ்வழக்கில் திருத்துறைப்பூண்டி மேலவடியக்காடுவைச் சேர்ந்த கார்த்திக் (27) என்ற இளைஞரும் கைது செய்யப்பட்டார். அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்படி, கார்த்திக் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் ஐபிஎல் எதிர்ப்பு போராட்டத்தின்போது பணியில் இருந்த காவலர் செந்தில்குமார் என்பவரை தாக்கியதாக எண்ணூரைச் சேர்ந்த மதன் குமார் (22) என்பவரை திருவல்லிக்கேணி போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x