Published : 01 Jun 2018 10:01 AM
Last Updated : 01 Jun 2018 10:01 AM
குரோம்பேட்டை, சிட்லபாக்கம் பகுதிகளில் தண்ணீர் லாரிகளால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க, அவற்றுக்கு புதிய கட்டுப்பாடுகளை போலீஸார் விதித்துள்ளனர்.
குரோம்பேட்டை, அஸ்தினாபுரம், சிட்லபாக்கம், ராதாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லாரிகள் மற்றும் டிராக்டர்களில் பொதுமக்கள் தண்ணீர் பெற்று வருகின்றனர். கடந்த சில மாதங்களாக தண்ணீர் ஏற்றி வரும் லாரிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதைத் தடுக்க போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆலோசனைக் கூட்டம்
இந்நிலையில் விபத்துகளைத் தடுப்பது மற்றும் லாரிகளைப் பாதுகாப்பாக இயக்குவது தொடர்பாக பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் தலைமையில் சிட்லபாக்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பல்லாவரம் வட்டாட்சியர் வில்பிரட் கிச்சிங், சேலையூர் காவல் உதவி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் உள்ளாட்சி, நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 9 துறை அதிகாரிகள் தண்ணீர் லாரி மற்றும் கிணறுகள் உரிமையாளர்கள், குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் குரோம்பேட்டை மற்றும் சிட்லபாக்கம் பகுதியில் தண்ணீர் விநியோகம் செய்யும் லாரிகள் மற்றும் டிராக்டர்களின் விபத்துகளைத் தடுக்க, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, காவல் துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி, தண்ணீர் விநியோகம் செய்யும் வாகனங்கள் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையிலும் இரவு 10 மணிக்கு மேலும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
வேகத் தடைகள்
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டுபவர்கள், குடிபோதையில் தண்ணீர் வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வாகனங்களை முறைப்படுத்த அவை சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படும். முக்கிய சாலை சந்திப்புகளில் வேகத் தடைகள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூட்டத்தில் முடிவு செய்யப் பட் டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT