Published : 01 Jun 2018 10:00 AM
Last Updated : 01 Jun 2018 10:00 AM

பிளஸ் 2 விடைத்தாள் நகலை நாளை பதிவிறக்கம் செய்யலாம்: அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் நாளை (சனிக்கிழமை) ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில் தேர்வெழுதிய விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் விடைத்தாள் நகலை ஜூன் 2-ம் தேதி (சனிக்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் scan.tndge.in என்ற இணையதளத்தில் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதளத்தில் அதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

விண்ணப்பத்தை பூர்த்திசெய்து 2 நகல்கள் எடுத்து ஜூன் 4 முதல் 6-ம் தேதி வரை சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கான கட்டணத்தை முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x