Published : 01 Jun 2018 08:19 AM
Last Updated : 01 Jun 2018 08:19 AM
ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி அருகே உள்ள கலைஞர் நகரைச் சேர்ந்த தொழிலாளர்களான சுரேஷ் என்பவரது மகன் கவுதம் (12), ரகுபதி மகன் ராஜ்குமார் (12), செல்வம் மகன் சஞ்சய் (12). இதில் ராஜ்குமார் புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியிலும், மற்ற இருவர் கணக்கரசம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியிலும் படித்து வந்தனர்.
கோடை விடுமுறை என்பதால் இவர்கள் 3 பேரும் நேற்று மதியம் நல்லூர் கிராமத்தை ஒட்டியுள்ள குளத்தில் குளிக்கச் சென்றனர்.
இப்பகுதியில் பெய்த மழையில் குளத்தில் ஓரளவு நீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் குளத்தில் இறங்கிய 3 பேரும் ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளனர். ம
ூவருக்கும் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கினர். அருகில் இருந்தவர்கள் குளத்தில் இறங்கி தேடியபோது மூவரின் உடல்களும் மீட்கப்பட்டன. இந்த சம்பவம் புன்செய் புளியம்பட்டியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT