Published : 04 May 2018 07:45 PM
Last Updated : 04 May 2018 07:45 PM

ரூ.4 லட்சம் கேட்டு நகைக்கடை அதிபருக்கு மிரட்டல்: விசிக பிரமுகர் கைது

சென்னையில் நகைக் கடை அதிபரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி வட்டச் செயலாளர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாத். இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் பழைய கட்டிடம் ஒன்று உள்ளது. அந்தக் கட்டிடத்தை இடித்துப் புதிதாகக் கட்டிடம் கட்டும் பணியில் ரங்கநாத் ஈடுபட்டிருந்தார். தினமும் கட்டிட வேலைகள் வேகமாக நடந்து வந்தன.

நகைக்கடை அதிபர் ரங்கநாத்தின் நண்பர் மணிகண்டன். அதே பகுதியைச் சேர்ந்த இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் 55-வது வட்டச் செயலாளராக உள்ளார். ரங்கநாத் கட்டிடம் கட்டும் போது குடியிருந்தவர்களை மணிகண்டனின் செல்வாக்கை வைத்து ரங்கநாத் காலி செய்துள்ளார். இதற்காக ரங்கநாத் அவ்வப்போது மணிகண்டனுக்கு பணம் தருவதுண்டு.

இந்நிலையில் மணிகண்டனுக்கு ரங்கநாத்திடமிருந்து அதிக அளவில் பணம் கறக்கும் ஆசை வந்துள்ளது. இதனால் ரங்கநாத்திடம் ரூ.4 லட்சம் கேட்டு தொந்தரவு கொடுத்துள்ளார். பணம் தராவிட்டால் கட்டிடம் கட்ட முடியாது என்று மிரட்டியுள்ளார்.

இதையடுத்து நகைக் கடை அதிபர் ரங்கநாத் சென்னை பூக்கடை காவல் துணை ஆணையர் செல்வகுமாரிடம் நேரில் புகார் அளித்தார். இதையடுத்து விசாரணை நடத்திய போலீஸார், மணிகண்டன் மிரட்டியது உண்மை என தெரியவந்ததன் பேரில் மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x