Published : 04 May 2018 09:18 AM
Last Updated : 04 May 2018 09:18 AM

திருவள்ளூர் பகுதியில் சிறுமி உட்பட 4 பேர் மாயம்

புது கும்மிடிப்பூண்டியை சேர்ந்த சிறுமி ஒருவர், கடந்த 1-ம் தேதி மதியம் கடைக்குச் செல்வதாக கூறி வீட்டை விட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை எனச் சொல்லப்படு கிறது.

திருவள்ளூர் அருகே உள்ள புல்லரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுத்துரை மகள் சந்தியா(21). பி.காம் படித்த இவர், கடந்த 10 மாதங்களாக ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், மே தினத்தை முன்னிட்டு, நிறுவனத்துக்கு விடுமுறை விடப்பட்டதால் கடந்த 1-ம் தேதி வீட்டில் இருந்த சந்தியா, அன்று காலை திருவள்ளூர் சென்றுவருவதாக கூறி வீட்டைவிட்டு வெளியே சென்றார். பிறகு வீடு திரும்ப வில்லை.

கல்லூரி மாணவி

அதேபோல், சோழவரம் அருகே உள்ள காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் மதியழகன் மகள் மான்ஷி (19). இவர், அம்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில், வழக்கம்போல் கடந்த 1-ம் தேதி இரவு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த மான்ஷி, மறுநாளான கடந்த 2-ம் தேதி அதிகாலை காணவில்லை. பெற் றோர் பல்வேறு இடங்களில் தேடியும் மான்ஷி கிடைக்க வில்லை.

மேலும், வெள்ளவேடு அருகே உள்ள திருமழிசையைச் சேர்ந்தவர் முரளி மகன் சதீஷ்(19). இவர், கடந்த மாதம் 30-ம் தேதி காலை, வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை என சொல்லப்படுகிறது.

சிறுமி உட்பட 4 பேர் மாயமான இந்தச் சம்பவங்கள் குறித்து, கும்மிடிப்பூண்டி - சிப்காட், சோழவரம், புல்லரம்பாக்கம் மற்றும் வெள்ளவேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து மாயமான 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x