Published : 30 Apr 2018 08:41 AM
Last Updated : 30 Apr 2018 08:41 AM
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தென், வட மாவட்டங்களில் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து மக்களை சந்திக்கி றார்.
மாதிரி கிராம சபை கூட்டத்தை கடந்த 24-ம் தேதி கமல் நடத்தினார். அனைவரும் கண்டிப்பாக கிராம சபை கூட்டங்களில் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்நிலையில் தனது அடுத்தக் கட்ட சுற்றுப்பயணம் குறித்த விவரங்களை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
மக்களுடனான பயணம் என்ற பெயர் வைத்துள்ள கமல்ஹாசன் முதல்கட்டமாக மே 16-ம் தேதி கன்னியாகுமரி, 17-ம் தேதி தூத்துக்குடி, 18-ம் தேதி திருநெல்வேலி, விருதுநகரில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்கிறார். இரண்டாம் கட்டமாக ஜூன் 8-ம் தேதி திருப்பூர், 9-ம் தேதி நீலகிரி, 10-ம் தேதி கோயம்புத்தூரில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT