Published : 30 Apr 2018 08:37 AM
Last Updated : 30 Apr 2018 08:37 AM

2 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்: சென்னை வானிலை மையம் அறிவிப்பு

திருச்சி, சேலம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அடுத்து வரும் இரு நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடக மாநிலங்களில் கடும் வெயில் வாட்டி வருகிறது. தெலங்கானா மாநிலம் அடிலாபாத் பகுதியில் அதிகபட்சமாக 111 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவாகி வருகிறது. அதனால் அம்மாநிலங்களில் இருந்து வெப்பக்காற்று, தமிழகம் நோக்கி வீசி வருகிறது. அதன் காரணமாக அடுத்து இரு நாட்களுக்கு வேலூர், தருமபுரி, திருச்சி, சேலம் ஆகிய 4 மாவட்டங்களில் வெப்பநிலை 105.8 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

நேற்று மாலை 5.30 மணிக்கு எடுக்கப்பட்ட அளவின்படி, அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 105.44, திருத்தணியில் 104.36, வேலூரில் 103.1, சேலத்தில் 100.94, திருச்சி மற்றும் தரும புரியில் தலா 100.76, நாமக்கல்லியில் 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x