Published : 09 Apr 2018 10:16 PM
Last Updated : 09 Apr 2018 10:16 PM

தென் தமிழகத்தில் திங்கட்கிழமை இரவு முதல் பரவலாக மழை: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

 

தென் தமிழகத்தில் இன்று இரவு முதல் பரவலாக மழை பெய்யத் தொடங்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேன் என்ற பெயரில் ஃபேஸ்புக்கில் பிரதீப் ஜான் எழுதி வருகிறார். அவர் கூறியிருப்பதாவது:

எதிர்பார்க்கப்பட்டதுபோல் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்று இரவு முதல் பரவலாக மழை பெய்யத் தொடங்கும். டெல்லா மாவட்டங்களான நாகப்பட்டிணம், காரைக்கால், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் நீண்ட நாட்களுக்கு பின் இன்று நண்பகலுக்கு பின் மழை பெய்து இருக்கிறது.

தென் தமிழகத்தின் பலபகுதிகளிலும், கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று இரவு மழை அல்லது நாளை காலை மழை பெய்யக்கூடும்.

நெல்லை, தேனி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு அல்லது நாளை காலை மழை பெய்யக்கூடும். மதுரை, சிவகங்கையிலும் கூட மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

சென்னை எப்படி?

சென்னையைப் பொறுத்தவரை ஒரு வாரத்துக்கு வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ்குள்ளேயே இருக்கும். வங்காள விரிகுடா கடலில் இருந்து கிழக்கு நோக்கி காற்று வீசத் தொடங்கிவிட்டதால், வெப்பநிலை இயல்புக்கு குறைவாகவே இருக்கும். அதிகபட்சமாக 36 டிகிரிவரை செல்லலாம். கடந்த 2016-ம் ஆண்டு இருந்ததைப் போல் 40டிகிரி அளவுக்கு செல்லாது.

இன்று காலை 8.30மணி அளவில் பெய்த மழை அளவு வருமாறு:

சோத்துப்பாறை அணை (தேனி)- 86 மி.மீ. கல்லிடைக்குறிச்சி(நெல்லை)-60 மி.மீ, புல்லம்பாடி(திருச்சி) 51மி.மீ, ராஜபாளையம் 32மி.மீ,

இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x