Published : 09 Apr 2018 04:52 PM
Last Updated : 09 Apr 2018 04:52 PM

ராசிபுரம் அருகே 17 வயது சிறுமிக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்ததால் தற்கொலை முயற்சி

 ராசிபுரம் அருகே 12-ம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமிக்கு கட்டாயத் திருமணம் செய்துவைத்ததால், மனமுடைந்த அவர் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி செய்தார். தற்போது அந்தச் சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வாணகாரன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் வீரகுமார், ஓட்டுநர். இவரது மகள் அதேபகுதியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், மாணவி படித்துகொண்டிருக்கும்போதே அவரது பெற்றோர் கபிலர்மலை பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சுப்பிரமணி (30) என்பவருடன் 3 வாரத்திற்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இதனால், மாணவி கடந்த சில தினங்களாகவே மனமுடைந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று (திங்கள்கிழமை) காலையில் மாணவி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து, அருகிலிருந்தவர்கள் உடனடியாக மாணவியை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துமனையில் அனுமதித்தனர்.

மாணவிக்குக் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்டது குறித்து புதுசத்திரம் காவல்துறையினர் மாணவியின் பெற்றோர் மற்றும் சுப்பிரமணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x