Published : 09 Apr 2018 02:26 PM
Last Updated : 09 Apr 2018 02:26 PM
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே கார் மீது அரசு பேருந்து நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
வத்தலக்குண்டு அருகே கட்டகாமன்பட்டியில் இன்று (திங்கள்கிழமை) கொடைக்கானலில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த கார் மீது, தேனி சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து நேருக்கு நேர் மோதியது. இதில் கார் சுக்குநூறாக நொறுங்கியது.
இந்த கோர விபத்தில் காருக்குள்ளிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அப்துல் ரசீத், ரெஜினா, நயினார், பாஸ்டின் ஆகியோர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, சம்பவம் குறித்து தகவலறிந்த காவல் துறையினர் உயிரிழந்தோரின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், காயமடைந்த 2 பேர் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT