Published : 09 Apr 2018 01:10 PM
Last Updated : 09 Apr 2018 01:10 PM

காவிரிக்காக தமிழகமே கொந்தளிக்கும்போது சென்னையில் ஐபிஎல் போட்டி நடத்தக் கூடாது: பாரதிராஜா வலியுறுத்தல்

காவிரி மேலாண்மை வாரியம் கோரி தமிழகம் கொந்தளிப்பில் இருக்கும்போது சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட கூடாது என இயக்குநர் பாரதிராஜா வலியுறுத்தியுள்ளார்.

சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் இன்று (திங்கள்கிழமை) நடிகர் சத்யராஜ், இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், ஆர்.கே.செல்வமணி, வி.சேகர், தங்கர் பச்சான், வெற்றிமாறன், ராம், கவுதமன் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் ஐபிஎல் போட்டி நடத்தப்படக் கூடாது என அவர்கள் வலியுறுத்தினர்.

அப்போது பேசிய இயக்குநர் பாரதிராஜா, “காவிரி மேலாண்மை வாரியம் கோரி தமிழகம் கொந்தளிப்பில் இருக்கும்போது சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட வேண்டாம். போராட்ட மனநிலையில் உள்ள இளைஞர்களை ஐபிஎல் மூலம் திசை திருப்ப முயற்சி நடக்கிறது.

அனைவரும் தங்கள் கட்சி அடையாளங்களை துறந்துவிட்டு காவிரிக்காக போராட வேண்டும். அரசியல் தலைவர்கள் தங்களுடைய கொள்கைகளையும், கொடிகளையும் துறந்துவிட்டு காவிரிக்காக போராட வேண்டும். அதன்பின், மீண்டும் அவர்கள் தங்கள் கூடாரத்துக்குள் செல்லலாம்” என பாரதிராஜா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x