Published : 09 Apr 2018 08:57 AM
Last Updated : 09 Apr 2018 08:57 AM
சென்னைக்கு 12-ம் தேதி பிரமதமர் மோடி வருவதையொட்டி 5 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் பாதுகாப்புத்துறை சார்பில் ராணுவ கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வரும் 12-ம் தேதி சென்னை வர உள்ளார். ராணுவ கண்காட்சியை தொடங்கி வைத்த பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மாமல்லபுரம் செல்கிறார். பின்னர் அடையாறு கேன்சர் இன்ஸ்டியூட் வைர விழாவில் பங்கேற்கிறார். அதன் பிறகு அன்றைய தினமே டெல்லி புறப்படுகிறார்.
பிரதமரின் வருகையை முன்னிட்டு விமான நிலையம் முதல் ராணுவ கண்காட்சி நடைபெறும் திடல் வரை 5 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து வரும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம் என திமுக தலைமையில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் ஏற்கெனவே, முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால், எந்த விதமான அசம்பாவிதமும் நடந்து விடாதபடி பார்த்துக்கொள்ள சென்னை போலீஸார் முடிவு செய்துள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT