Published : 09 Apr 2018 07:46 AM
Last Updated : 09 Apr 2018 07:46 AM

தமிழகம் முழுவதும் காங்கிரஸ் இன்று உண்ணாவிரதம்

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தக் கோரி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸார் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றனர்.

எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தக்கோரி நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் சார்பில் ஏப்ரல் 9-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் தேசியத் தலைவர் ராகுல் காந்தி அறிவித்திருந்தார்.

அதன்படி, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் எஸ்சி பிரிவு சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது. சென்னை சேப்பாக்கம் விருந்தினர் இல்லம் அருகே நடக்கும் உண்ணாவிரதப் பேராட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், எஸ்சி பிரிவு மாநிலத் தலைவர் கு.செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x