Published : 06 Apr 2018 10:13 PM
Last Updated : 06 Apr 2018 10:13 PM

காவிரி விவகாரம்; அஞ்சல் அட்டையில் கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்புக: ஸ்டாலின் வேண்டுகோள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விவசாயிகள், பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்குமாறு திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து திருச்சி முக்கொம்பில் இருந்து காவிரி உரிமை மீட்புப் பயணத்தை ஸ்டாலின் சனிக்கிழமை தொடங்குகிறார். மற்றொரு பயணம் அரியலூரில் இருந்து வரும் 9-ம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில் இன்று ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ''காவிரி உரிமைப் போராட்டத்தின் அடுத்தகட்டமாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாளை திருச்சியிலிருந்து சென்னை ஆளுநர் மாளிகை நோக்கி 'காவிரி உரிமை மீட்புப் பயணம்' தோழமைக் கட்சித் தலைவர்களோடு தொடங்கவிருக்கிறேன். நடப்போம் - குரல் கொடுப்போம் - மீட்டெடுப்போம்.

இந்தப் பயணத்தின்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வழிநெடுக உள்ள விவசாயிகள், பொதுமக்களிடம் அஞ்சல் அட்டைகளில் கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்போம்'' என ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அஞ்சல் அட்டை மாதிரி:

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x