Published : 06 Apr 2018 09:54 AM
Last Updated : 06 Apr 2018 09:54 AM
அந்நிய செலாவணி மோசடி வழக்கில், குறுக்கு விசாரணைக்காக வழக்கை தள்ளி வைக்க வேண்டும் என டிடிவி. தினகரன் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, நேற்றைய தினமே குறுக்கு விசாரணையை நடத்த உத்தரவிட்டார்.
அந்நிய செலாவணி மோசடி வழக்கு விசாரணைக்காக தினகரன் நேற்று எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சியான அமலாக்கத் துறை முன்னாள் அதிகாரி ஜானகிராமனிடம் குறுக்கு விசாரணை நடத்த தினகரன் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. கோரிக்கையை நிராகரித்த நீதிபதி மலர்மதி, “ஏற்கெனவே கடந்த 4 மாதங்களாக இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. விரைவாக இவ்வழக்கை முடிக்க வேண்டும். அதனால் இப்போதே அவரிடம் குறுக்கு விசாரணையை நடத்தி முடியுங்கள்” என்றார். அதன்பிறகு ஒரு மணி நேரம் ஜானகிராமனிடம், தினகரன் தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தினார். பின்னர் வழக்கை வரும் 1-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT