Published : 06 Apr 2018 09:48 AM
Last Updated : 06 Apr 2018 09:48 AM
தேசியக் கொடியை அவமதித்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:
பொது இடத்தில் பொதுமக்களின் பார்வையில் தேசியக் கொடி அல்லது இந்திய அரசமைப்புச் சட்டம் அல்லது அதனுடன் தொடர்புடைய எந்த ஒரு பகுதியை வாய்மொழியாகவோ, எழுத்து மூலமாகவோ, செயல்கள் மூலமாகவோ எரிக்கிற, சிதைக்கிற, தோற்றத்தைக் கெடுக்கிற, மாசுபடுத்துகிற, உருக்குலைக்கிற, அழிக்கிற, மிதிக்கிற அல்லது பிற வகையில் அவமதித்தல், புறக்கணித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படக்கூடிய சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதித்து தண்டிக்கப்படுவர்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT