Published : 06 Apr 2018 07:50 AM
Last Updated : 06 Apr 2018 07:50 AM
திமுக கூட்டணி கட்சியினர் திண்டுக்கல்லில் நடத்திய சாலை மறியலின்போது, அரசு, தனியார் என 8 பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸ் நிலையம் முன் அரசு பஸ் மற்றும் தனியார் பஸ்களின் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கினர். இதில் முன்பக்க கண்ணாடிகள் சேதமடைந்தன. திண்டுக்கல் பஸ் நிலையம், நந்தவனப்பட்டி, காட்டாஸ்பத்திரி, தோமையார்புரம் அருகே அரசு பஸ்கள் மீது கல்வீசப்பட்டதில் கண்ணாடிகள் சேதமடைந்தன.
திண்டுக்கல் நகர், புறநகர் பகுதிகளில் மட்டும் அரசு மற்றும் தனியாரைச் சேர்ந்த மொத்தம் 8 பஸ்களின் கண்ணாடிகள் கல்வீச்சில் சேதமடைந்தன.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கழனிவாசல் பகுதியில் திருச்சியில் இருந்து காரைக்குடி வந்த அரசு பஸ் மீதும், திருச்சியில் இருந்து தேவகோட்டைக்கு சென்ற அரசு பஸ் மீதும் மர்ம நபர்கள் கல்வீசி தாக்கினர். இதில் பின் பக்கக் கண்ணாடிகள் உடைந்தன. இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT