Published : 20 Mar 2018 08:27 PM
Last Updated : 20 Mar 2018 08:27 PM
தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், ''குமரிக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று நிலவுகிறது. அதனால் கேரளாவுக்குத்தான் மழை கிடைக்கும். தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பில்லை'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT