Published : 20 Mar 2018 04:47 PM
Last Updated : 20 Mar 2018 04:47 PM

நாள், நேரம், இடம் குறித்துவிட்டு வா... - உதயநிதி ஸ்டாலின் அழைப்பு

'பெரியார் சிலையை உடைக்க வலுவிருந்தால், நாள், நேரம், இடம் குறித்துவிட்டு வா...' என உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

அரசியலில் தனக்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், சமீப காலமாக அரசியலில் ஈடுபாடு காட்டி வருகிறார். அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதுடன், அரசியல் சார்ந்த கருத்துகளையும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பெரியார் சிலை உடைக்கப்பட்டது குறித்து ட்விட்டரில் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

''பெரியார் என்பவர் தனிமனிதரல்ல, தன்மானமுள்ள தமிழினத்தின் அடையாளம். ஒன்றை உடைத்தால் ஆயிரமாய், லட்சமாய் முளைத்து எழுவார்கள். உடைத்தெறிய உனக்கு வலுவிருந்தால், இறுதியாய் நாள், நேரம், இடம் குறித்துவிட்டு வா. உன்னைச் சந்திக்க பெரியாரின் பேரப்பிள்ளைகள் நாங்கள் தயார்'' என ட்விட்டரில் அழைப்பு விடுத்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x