Published : 20 Mar 2018 01:22 PM
Last Updated : 20 Mar 2018 01:22 PM
ரத யாத்திரை தொடர்பாக தமிழக அரசை காட்டமாக விமர்சித்து கமல்ஹாசன் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தன்னுடைய கருத்துகளை ட்விட்டரில் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். தற்போது தமிழக அரசை காட்டமாக விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
“சமூக நல்லிணக்கத்திற்காக எழும் நியாயமான குரல்களுக்கு 144 தடை உத்தரவு, கைது. அரசியல் நோக்கத்துடன் மக்களைப் பிளவுபடுத்தும் ஊர்வலத்திற்கு அனுமதி. மக்கள் மனதைப் பிரதிபலிக்காமல், மாநிலம் எங்கும் தேர்வு எழுதக் காத்திருக்கும் மாணவர்களையும் மதியாமல் யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு” என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT