Published : 03 Mar 2018 05:36 PM
Last Updated : 03 Mar 2018 05:36 PM
காவிரி படுகையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயல்கள் அதிர்ச்சி அளிப்பதாக கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக கமல்ஹாசன் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''மேலும் ஒரு அரசுத்துறை செயலற்று இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. காவிரிப் படுகையில் மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் செயல்கள் அதிர்ச்சி அளிக்கிறது . தமிழ் மக்களின் நம்பிக்கைக்குத் துரோகம் இழைக்கிறது வாரியம். மாசுக்கட்டுப்பாடு வாரியமே விழித்தெழு'' என்று கமல் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, காவிரி படுகையில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தால் ஏற்படுத்தப்பட்ட ஹைட்ரோகார்பன் கிணறுகள் அனைத்தும் சட்டவிரோதமாக செயல்படுவதாக 'காவிரி டெல்டா வாட்ச்' என்ற அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரியவந்தது. இதனால் காவிரி படுகையில் உரிமம் பெறாமல் உள்ள ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மாசுக்கட்டுப்பாடு வாரியமே விழித்தெழ வேண்டும் என்று கமல்ஹாசன் கோரிக்கை விடுத்திருப்பது கவனிக்கத்தக்கது.
கமல் ட்வீட்:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT