Published : 03 Mar 2018 08:11 AM
Last Updated : 03 Mar 2018 08:11 AM

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து கிராமங்கள் தோறும் பிரச்சாரம்: தமிழ்நாடு காவிரி குடும்பம் கூட்டத்தில் முடிவு

6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காவிட்டால், உச்ச நீதிமன்ற தீர்ப்பு விவரம் குறித்து கிராமங்கள்தோறும் சென்று பிரச்சாரம் செய்வது என தமிழ்நாடு காவிரி குடும்பம் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு காவிரிக் குடும்பத்தின் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் மன்னார்குடி ரெங்கநாதன் தலைமை வகித்தார்.

இதில் விவசாய சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்துக்குள் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ள நிலையில் கர்நாடக முதல்வர் அதற்கு மறுப்பு தெரிவித்திருப்பதும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க காலக்கெடு ஏதும் நிர்ணயிக்க முடியாது என்ற கருத்தை தெரிவித்திருப்பதும் நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் செயல்.

எனவே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 6 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால், வாரியம் அமைப்பதன் முக்கியத்துவம், மத்திய அரசு அதை ஏற்க மறுப்பது குறித்தும் காவிரி டெல்டாவில் உள்ள கிராமங்களில் விவசாயிகள், பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘டெல்டாவை காப்போம், காவிரியை காப்போம்’ என்ற கோஷத்தை முன்வைத்து பிரச்சார இயக்கம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x