Published : 03 Mar 2018 08:10 AM
Last Updated : 03 Mar 2018 08:10 AM

திருச்சி விமானநிலையத்தில் ரூ.8.11 லட்சம் கரன்சிகள் பறிமுதல்

திருச்சி விமானநிலையத்தில் ரூ.8.11 லட்சம் மதிப்பிலான கரன்சி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருச்சியில் இருந்து மலிண்டோ ஏர் விமானம் நேற்று மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு புறப்பட தயாரானது. அதில் பயணிக்க வந்திருந்தவர்கள் மற்றும் அவர்களது உடமைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை யிட்டனர்.

அப்போது மதுரையைச் சேர்ந்த முருகவேல் என்பவரிடம் இருந்து ரூ.8.11 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் மற்றும் அனுமதித்த அளவைவிட அதிகமாக உள்நாட்டு கரன்சிகள் கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து, அவரிடம் விசாரணை நடத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x