Published : 03 Mar 2018 08:09 AM
Last Updated : 03 Mar 2018 08:09 AM
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே கிள்ளனூரில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 26 பேர் காயம் அடைந்தனர்.
கிள்ளனூரில் ஆட்சியர் சு.கணேஷ் தலைமையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
இதில், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 755 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. காளைகளை அடக்க 260 மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர்.
காளைகள் முட்டியதில் 26 பேர் காயம் அடைந்தனர். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.செல்வராஜ் தலைமையிலான போலீஸார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT