Published : 13 Feb 2018 09:00 PM
Last Updated : 13 Feb 2018 09:00 PM
நீலாங்கரையில் குடும்பத்தகராறில் மகன் தாக்கியதில் தந்தை பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இதையடுத்து மகனை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை, நீலாங்கரை, ராஜேந்திரா நகர், வசித்து வந்தவர் முருகேசன்(60). கடந்த 07-ம் தேதி அன்று இரவு தனது தனது மனைவி பத்மாவதியிடம் தகராறு செய்துள்ளார். கோபத்தில் மனைவியை தாக்கியுள்ளார். தாயை அடித்ததால் மகன் திருவேங்கடம் தந்தை முருகேசனிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த திருவேங்கடம் தனது தந்தை முருகேசனை கையால் தாக்கியுள்ளார். தாக்குதலில் பலத்த காயமடைந்த முருகேசன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். போலீஸார் திருவேங்கடத்தை கைது செய்து 307-ன் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று முருகேசன் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டார். இது தொடர்பாக நீலாங்கரை போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தந்தையை தாக்கி கொலை செய்த மகன் திருவேங்கடத்தை(27) கைது செய்தனர். கைது செய்யப்பட்ட திருவேங்கடம் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். கைது செய்யப்பட்ட திருவேங்கடம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT