Published : 13 Feb 2018 10:06 AM
Last Updated : 13 Feb 2018 10:06 AM
இளைஞர் ஒருவரை கடத்திய புகாரின் பேரில் இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா ரஹீமை சென்னையில் போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
தென்காசியைச் சேர்ந்தவர் சையத் முகமது புகாரி. கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் மண்ணடியில் இருந்து கடத்தப்பட்டதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்தது. இதைத் தொடர்ந்து திருவல்லிக்கேணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து சையத் முகமது புகாரியை மண்ணடி பகுதியில் மீட்டனர். இது தொடர்பாக ஏற்கெனவே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக, இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவரான தடா ஜெ.அப்துல் ரஹீமை திருவல்லிக்கேணி போலீஸார் நேற்று கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT