Published : 11 Feb 2018 09:09 PM
Last Updated : 11 Feb 2018 09:09 PM

சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் படத்தை திறப்பதில் தவறில்லை: தமிழிசை

தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் உருவப் படத்தை திறப்பதில் தவறேதுமில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''ஊழல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்பது உண்மைதான். ஆனாலும் ஒரு பெண்ணாக பல்வேறு இன்னல்களை கடந்து, தடைகளை தாண்டி அரசியலில் சாதித்தவர். சுமார் 15 ஆண்டுகள் முதல்வராக இருந்தவர். எனவே, சட்டப்பேரவையில் அவரது உருவப் படத்தை திறப்பதில் தவறில்லை'' என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x