Published : 11 Feb 2018 10:02 AM
Last Updated : 11 Feb 2018 10:02 AM

வானூர் அருகே பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ததாக இளைஞர் கைது

வானூர் அருகே ரங்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்த 12 வயதுடைய மாணவி அதே கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த சில நாட்களாக மாணவி பள்ளிக்குச் சென்று வரும் சமயத்தில், புதுச்சேரி மாநிலம் லிங்காரெட்டிப்பாளையத்தை சேர்ந்த ஏழுமலை மகன் அருண்குமார் (28) என்பவர், அந்த மாணவியிடம் தனது செல்போன் எண்ணை கொடுத்து கட்டாயப்படுத்தி பழகி வந்துள்ளார். மேலும் அந்த மாணவியை அருண்குமார் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதையறிந்தத மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனர்.

மற்றொரு சம்பவத்தில் முதியவர் கைது

வானூர் அருகே கலைவாணன் நகரைச் சேர்ந்தவர் கலைவாணன் (60). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று முன்தினம் மாலை அதே பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமியை சாக்லெட் வாங்கி கொடுத்து, தன் வீட்டிற்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அங்கிருந்து தப்பிய அச்சிறுமி தன் பெற்றோரிடம் நடந்ததை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கலைவாணனை கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x