Published : 11 Feb 2018 09:38 AM
Last Updated : 11 Feb 2018 09:38 AM

கணவர் வீட்டின் முன்பு இளம்பெண் தர்ணா

புதுச்சேரி கொட்டுப்பாளையத்தில் கணவர் வீட்டு முன்பு இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்டார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தழுதாளி பகுதியைச் சேர்ந்தவர் ராமஜெயம். எல்ஐசி ஏஜெண்டான இவர், கடந்த ஜூலை மாதம் அதே பகுதியைச் சேர்ந்த குப்புசாமி மகள் சுந்தரி (28) என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னர் இருவரும் புதுச்சேரி கொட்டுப்பாளையத்தில் உள்ள வீட்டில் குடியேறினர்.

இதனிடையே ராமஜெயம் மனைவியுடன் சேர்ந்து வாழவில்லை என கூறப்படுகிறது. மேலும் ராமஜெயம், மனைவி சுந்தரியை பொங்கல் அன்று அவரது தாய்வீட்டில் விட்டுவிட்டு புதுச்சேரி திரும்பியுள்ளார். தனது கணவரை தேடி சுந்தரி புதுச்சேரி வந்தாலும் அவரை கண்டுபிடிக்க முடியாத நிலையில் வில்லியனூர் மகளிர் காவல் நிலையத்தில் முறையிட்டார்.

போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பிய நிலையில் மீண்டும் சுந்தரியுடன் வாழ மறுத்து ராமஜெயம் தலைமறைவானதாக கூறப்படுகிறது. இதுபற்றி ராமஜெயம் உறவினர்களிடம், பெண் வீட்டார் முறையிட்ட நிலையில் நேற்று பேச்சுவார்த்தை நடத்த சுந்தரியுடன் அனைவரும் புதுச்சேரி வந்தனர்.

அப்போது ராமஜெயம் வீடு பூட்டுபோட்டு இருந்தது. இதனால் விரக்தியடைந்த சுந்தரி கணவர் வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டுமென சுந்தரி வலியுறுத்தினார். தகவலின் பேரில் வந்த லாஸ்பேட்டை, கோரிமேடு போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தி அழைத்துச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x