Published : 05 Feb 2018 12:43 PM
Last Updated : 05 Feb 2018 12:43 PM

அதிமுகவில் இருந்தால்தான் நலத்திட்ட உதவிகளைப் பெற முடியுமா? - அமைச்சர் செல்லூர் ராஜூக்கு குஷ்பு கண்டனம்

 

அதிமுக உறுப்பினர் அட்டை இருந்தால் மட்டுமே தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற முடியும் என பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூக்கு காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிமுக உறுப்பினர் அட்டை இருந்தால் மட்டுமே தமிழக அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் பெற முடியும் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாக செய்தி வெளியானது. இதற்கு பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அமைச்சரின் பேச்சை விமர்சித்து சமூக வலைதளங்களிலும் பதிவுகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூக்கு, காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில், ''தமிழகத்தில் வசிக்கும் குடிமக்கள் அரசுத் திட்டங்களைப் பெற அதிமுக உறுப்பினராக இருக்க வேண்டும் என அதே கட்சியைச் சேர்ந்த அமைச்சர் கூறுகிறார். இது மிகவும் கடுமையானது. இதுபோன்று முட்டாள்தனமாக பேசி எதிர்ப்பை சந்திப்பார்கள் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. இவர்கள் இந்த மாநிலத்தை ஆள்வதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது பரிதாபமே. இதற்கான பாடம் உங்களுக்கு விரைவில் புகட்டப்படும்'' என குஷ்பு கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x