Published : 05 Feb 2018 10:16 AM
Last Updated : 05 Feb 2018 10:16 AM

பிஎஸ்என்எல் லேண்ட்லைன் போனுக்கான இலவச அழைப்பு சேவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

பிஎஸ்என்எல் நிறுவனம் ரத்து செய்வதாக அறிவித்த தனது பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு தரைவழி (லேண்ட்லைன்) தொலைபேசி இணைப்புகள் மூலம் ஞாயிற்றுக்கிழமைகளில் அளவில்லா இலவச அழைப்புகளை மேற்கொள்ளும் சேவையை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது தனது பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு தரை வழி தொலைபேசி மூலம் ஞாயிற்றுக்கிழமைகளில் தரை வழி தொலைபேசியில் இருந்து அளவில்லா எண்ணற்ற இலவச அழைப்புகளை (அன்லிமிடெட் ப்ரீ வாய்ஸ் கால்) மேற்கொள்ளும் சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில், இம்மாதம் 1-ம் தேதி முதல் இச்சேவையை ரத்து செய்ய உள்ளதாக பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்தது.

இந்த அறிவிப்பு ஏற்கெனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கும், புதிய வாடிக்கையாளர்களுக்கும், பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கும் பொருந் தும் எனத் தெரிவிக்கப்பட்டது. பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 12 மில்லியன் தரைவழி தொலைபேசி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

வாடிக்கையாளர்கள் அதிருப்தி

ஏற்கெனவே, இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை தரைவழி தொலைபேசி இணைப்பு மூலம் இலவச அழைப்புகளை மேற்கொள்ளும் சேவை, இரவு 10.30 மணி முதல் காலை 6 வரை என குறைக்கப்பட்டது. ஏற்கெனவே, அதிருப்தியில் இருந்த வாடிக்கையாளர்களுக்கு இந்த அறிவிப்பு மேலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக, வாடிக்கையாளர்கள் விடுத்த தொடர் கோரிக்கையை ஏற்று, தனது பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு தரைவழி (லேண்ட்லைன்) தொலைபேசி இணைப்பு மூலம் ஞாயிற்றுக்கிழமைகளில் அளவில்லா இலவச அழைப்புகளை மேற்கொள்ளும் சேவை, மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x