Published : 05 Feb 2018 09:52 AM
Last Updated : 05 Feb 2018 09:52 AM

கம்பம் அருகே ரூ.2.66 லட்சம் மதிப்பிலான ரூ.2000 கள்ள நோட்டுகள் பறிமுதல்: ஆறு பேர் கைது

தேனி மாவட்டம், கம்பம் அருகே ரூ.2.66 லட்சம் மதிப்பிலான ரூ.2000 கள்ள நோட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்து ஆறு பேரை கைது செய்தனர்.

கம்பம் அருகே கூடலூர் சாலையில் உள்ள புளியந்தோப்பில் கார் ஒன்று நேற்று நின்றிருந்தது.

அப்பகுதியில் சென்ற கம்பம் தெற்கு சார்பு ஆய்வாளர் ஜெயப்பாண்டி தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது காரில் போடி வினோபாஜி காலனியை சேர்ந்த செல்வராஜ்(60), சசிகுமார்(35), உத்தமபாளையம் நாட்டாண்மைக்காரத் தெருவை சேர்ந்த சுப்பையா(48), கண்ணன் (35), போடி குயவர்பாளையத்தைச் சேர்ந்த ராஜேந்திரன்(64) ஆகியோர் இருந்தனர்.

இவர்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் அளித்தனர். போலீஸார் காரை சோதனை செய்தபோது இரண்டு லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தது தெரிய வந்தது.

மேலும் கம்பம் அருகே கே.கே.பட்டியில் உள்ள ஜபருல்லா என்பவர் வீட்டில் கள்ள நோட்டுகளை வாங்கியதாகக் கூறியுள்ளனர்.

போலீஸார் கே.கே.பட்டி சென்று கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட ஜபருல்லா மகன் அஜ்மல்கானை(34) கைது செய்தனர். கள்ள நோட்டுகளையும், காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

ஜபருல்லா வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் உள்ளார். அவர் வீட்டில் வைத்திருந்த கள்ள நோட்டுகளை அஜ்மல்கான் புழக்கத்தில்விட முயற்சி செய்துள்ளார்.

கள்ள நோட்டுகள் எங்கு அச்சடிக்கப்பட்டது, யார் மூலமாக கம்பத்துக்கு கொண்டுவரப்பட்டது, இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பதை அறிய ஜபருல்லாவை காவலில் எடுத்து விசாரிக்க கம்பம் போலீஸார் முடிவு செய் துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x