Published : 05 Feb 2018 09:50 AM
Last Updated : 05 Feb 2018 09:50 AM
கச்சத்தீவு திருவிழாவுக்கு நாட்டுப் படகில் சென்று வர உரிய நடவடிக்கை எடுக்க உதவ வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் ராமேசுவரம் பாரம்பரிய மீனவர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை ராமேசுவரம் பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பு நிர்வாகிகள், ஒருங்கிணைப்பாளர் சே.சின்னதம்பி தலைமையில் நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது ஸ்டாலினிடம் அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது:
கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக கச்சத்தீவு அந்தோணியர் ஆலய திருவிழாவுக்கு தமிழக மீனவர்கள் நாட்டுப் படகில் சென்று வந்தனர். இந்நிலையில், 2014-ம் ஆண்டு முதல் கச்சத்தீவு திருவிழாவுக்கு நாட்டுப் படகில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையின் மூலம் கச்சத்தீவின் வழிபாட்டு உரிமையையும் தமிழக மீனவர்களிடம் இருந்து பறிக்க இந்திய, இலங்கை அரசுகள் சதி செய்கின்றன. இதை முறியடிக்க பாரம்பரிய மீனவர்கள் கச்சத்தீவு திருவிழாவுக்கு நாட்டுப் படகில் சென்றுவர உரிய நடவடிக்கை எடுக்க உதவ வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT